தந்தை மகள் உறவு நிபந்த‌னைகுட்பட்டதா?

Uncategorized இதில் ஜூன் 29, 2008 இங்கே kalyanakamala இவரால் இடப்பட்டது.

நேற்றைக்கு ஒரு நண்பரின் மகனுக்காக கோர்ட்டுக்குச் செல்லவெண்டிய நிர்பந்தம். கோர்ட்டுன்னா அந்த ஆணின் திருமணம் மன வேறுபாட்டால் முறிந்து விட்டது. பெண் குழந்தை ஒன்று உண்டு. வயது 7 முடிந்து 8வது வயது நடக்கிறது.
   அந்த ஆண் வெளினாட்டில் பணி புரிபவர். அதனால் அவர் குழந்தையைப் பார்க்க நீதிபதியின் தாற்காலிக ஆணைப்படி அனுமதி பெற்றாலும் பல காரணங்கள் சொல்லி  அதை அந்தப் பெண்மணியின் பக்கத்தினர்  தள்ளுபடி செய்கிறார்கள்.
   இவர் ஒவ்வொரு முறை வெளினாட்டிலிருந்து வந்து 6 அல்லது 7 மாதங்கள் இந்தியாவில் தங்கி மனுப்போட்டு கேஸ் கோர்ட்டில் வந்து வாதிக்கப்பட்டு பல ஹியரிங்குகளுக்குப் பின் சில நாட்கள் அவருடைய மகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டு  பின் முழு அனுமதி பெறாமலேயே வெளினாடு கிளம்பும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.         
   இப்படியே 7 வருடங்கள் போன பின் இப்போது அவருடைய தாய் தந்தையரும் அவருடன் கூடப்பொகும் அனுமதி பெற்றனர்.
ஒரு சப்போர்ட்டுக்காக நானும் போனேன்.
  அந்தக்குழந்தை  தகப்பனைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. தாயின் சவால் “உன்னால் முடிந்தால் அவளைத் திரும்பிப்பார்க்க வைத்து பேசு பார்க்கலாம்”என்பது
 அந்த ஆணை வளர்த்த விதம் சரியில்லை என்றும் புகார்.
    குழந்தையைப் போட்டோ எடுத்தால் கையிலிருந்த கேமராவைப் பிடுங்கித் தூர எறிந்து விடுவதாக மிரட்டல். அதையும் மீறி போட்டொ எடுத்தால் குழந்தையை மறைத்துக்கொள்ளுவது கைகளால் பேப்பரால் மற்ற பிற பொருட்கள்களால்.அதையும் மீறி செய்தால் போலீசைக் கூப்பிடுவதாக மிரட்டல்.

வயதில் பெரியவர்களான தாத்தா பாட்டிக்கு துளிகூட மதிப்பு கொடுக்கப்படவில்லை.
    அந்த ஆண் சரியாக வளர்க்கப்படவில்லை ,சரி!இந்தப்பெண் சரியாகச் செயல்படுகிறாளா? தன் குழந்தையை சரியான பாதையில்தான் கொண்டு போகிறார்களா?
    தகப்பனைப் பார்த்து” நீ பெண்ணை மதிக்கக் கற்றுக்கொள்.உன் பெண் உன்னை மதிப்பாள்” என்று அறிவுரை வேறு.
     த‌‌கப்பனைக் கோர்ட்டில் நிறுத்தி மதிக்காமல் நடத்தி த‌ன் மகளுக்கு அந்த்தாய் சொல்லிக் கொடுத்து வள‌ர்க்கும் முறைதான் என்ன? ஆணை மதிக்கக்டாது என்பதுதானே?
இதுதான் பெண் உரிமையா?

 

உன்னை நேசிக்கும் கூட்டம்………………….

Uncategorized இதில் மார்ச் 11, 2008 இங்கே kalyanakamala இவரால் இடப்பட்டது.

இன்னைக்குக்காலையில் எழுந்து எதையாவது செய்யவேண்டும் என்று மட்டும் நினைக்கிறோம். திட்டமிடல் என்ற பெயரில்.திட்டமிடும் போது ஒரு மகனாக அல்லது மகளாக,தாயாக அல்லது தந்தையாக,கணவனாக அல்லது மனைவியாக,சகோதரனாக அல்லது சகோதரியாக மட்டுமே என்ன என்ன செய்யலாம் என திட்டமிடுகிறோம்.வேலை செய்யும் இடத்தில் செய்யவேண்டிய பணிகள் நிமித்தம் திட்டமிடவும் செய்கிறொம்.
     என்றைக்காவது ஒரு சிறந்த மனிதனாக நாம் ஒரு நாளைத் திட்டமிட்டால் என்னவெல்லாம் செய்ய முடியும். யார் யாருக்கு என்ன என்ன செய்ய முடியும். எந்தெந்த வகையில் நாம் சிறந்தவன்? அதை நாம் எப்படி உபயொகித்து சில பல சிறந்தது என்று எல்லொராலும் கருதப்படுகிற செயலைச் செய்யமுடியும.
    முன்பு சொன்ன உறவு முறைகளை சந்தோஷப்படுத்த திட்டமிட்டு செயல்கள் செய்து வெற்றி பெற்றாலே போதுமே என்றுதான் பெரும்பாலும் எல்லொருக்கும் தோன்றும்.
    அதையும் தாண்டி சாதிக்கப்பிறந்தவர்கள் சில பல செயல்களைச் செய்கிறார்கள்.அதனால்தான் அவர்களைச் சாதிக்கப்  பிறந்தவர்களாக நினைக்கிறோம். அதற்கு மூலதனம் தன்னம்பிக்கை மற்றும் நேர்மையான உழைப்பு.
     தன்னம்பிக்கை எப்போது வரும்?
     தான் செய்யும் செயல் தீமை விளைவிக்காதது, ந‌ல்ல செயல்தான் என்பதை நாம் முதலில் நம்பவேண்டும்.அந்த செயலைச் செய்யும்போது ஏற்படும் அல்லல்கள் மற்றும் அவதுறுகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். நாம் அந்த செயலை அனுபவித்து(விரும்பி)ச்செய்ய வேண்டும்.அதைத்தான் involvement என்கிறார்கள்.

     சில சமயங்களில் நாம் பார்ப்போம் சில தொழில்முனைவோர் (proffessionals)ஒரு வேலையில் அதிகமாக நாட்டம் காட்டுவார்கள் .அந்த வேலை அவர்களுக்கு மற்ற வேலைகளைவிட அதிக பணம் வர வாய்ப்பே இருக்காது. நேரம் அதிகமாகச் வழிக்கவேண்டியிருக்கும்.
  வேலை பளுவும் அதிகமிருக்கும். ஆனாலும் அதைச் செய்ய நினைப்பார்கள் .செய்தும் வெற்றிகரமாக முடிப்பார்கள்.காரணம் அந்த ஈடுபாடும், நியாயமானது என்ற எண்ணமும் ,அந்த எண்ணம் தந்த நம்பிக்கையுமே ஆகும்.அந்த மாதிரி மனிதர்கள்தான் அடுத்தவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார்கள்.மற்றவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவது என்பது சும்மா வருவதில்லை.மிகப் பெரிய பண்புகளில் தலையாய ஒன்று அது.உன்னை நம்புகிற கூட்டத்தையும் உன்னை நேசிக்கிற கூட்டத்தையும் சம்பாதிப்பது மிகவும் உயர்ந்தவை.
அதைப்போல நமக்கும் பல சமயங்களில் நாம் ஏன் இதை எடுத்துச் செய்யக்கூடாது என்று தோன்றும்படி  சில செயல்கள் நம் முன் நிற்கும். அந்ததருணங்களில் சிறிதுகூட அடுத்த சிந்தனைக்கு இடம் தராமல் நம்பிக்கை உள்ள ஒரு நல்ல செயலை ஈடுபாட்டுடன் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ந‌ம் பிள்ளைகளுக்கு வளர்த்து விட வேண்டும்.அடுத்தவர் செய்யட்டுமே என்று ஒரு கணம் தவற விட்டால் ஒரு வாய்ப்பை நாம் வாழ்வில் தவற விடுகிறோம் எனப்பொருள்.  

அகில உலகப்பெண்கள் தினம்

Uncategorized இதில் மார்ச் 8, 2008 இங்கே kalyanakamala இவரால் இடப்பட்டது.

அகில உலகப்பெண்கள் தினமான இன்று சாதாரணமாக குடும்பத்திலிருக்கும் பெண்களாகட்டும் மற்றும் பணி செய்யும் பெண்களாக இருக்கட்டும் என்ன செய்யலாம்?
                நம்ம கலாசாரத்தைக் கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாம்.
                அதில் பெண்களின் பொறுப்புக்கள் என்று சொல்லப்பட்டிருப்பதை ஒரு முறை சொல்லிப் பார்க்கலாம் அல்ல்லது மற்றொரு பெண் கிடைத்தால் விவாதிக்கலாம்.
               .
               நமது பெண்ணை அல்லது நமது சகோதரிகளை மற்ற பெண்களை மதிக்கச் சொல்லித் தரலாம். அவர்கள் வீட்டு ஆண்களையும் அவர்கள் மூலமே (சச்சரவின்றி)  பெண்ணை மதிக்கிறவர்களாக நடக்கச் செய்யலாம்.
       மற்றும் நமது அண்டைஅயல் வீட்டிலிருக்கும் பெண்களை நாம் மதிக்கிறோமா என்றும் ,அவர்கள் சுதந்திர‌த்தை நாம் தடை செய்யாமல் அனுமதிக்கிறோமா என்று சிந்திக்கலாம்.
           பெண்கள் முன்னெற்றத்தை தடை செய்யாத வகையில் ஆண்களை (முக்கியமாக நமது மகன்களை மற்றும் அண்ணன் தம்பிகளை)வாழ சொல்லிக்கொடுக்கலாம்.
          மற்ற நமக்குத்தெரிந்த நம்மை மதிக்கிற பெண்களையும் அவர்களின் வீட்டு ஆண்களை பெண்ணை மதிக்கிறவர்களாக வாழக்கற்று கொடுக்கச் சொல்லலாம்.

          நாம் பார்க்கிற ஆண்களிடம் சின்ன சின்ன செயல்கள் மூலம் நாமும் மதிப்பிற்குரியவர்கள்தான் என்று எண்ணும்படி நடந்து கொள்ளலாம்.
         . சந்திக்கிற  சாமன்ய பெண்களிடம் சில பல பெண் உரிமைகளை அவளுடைய குடும்பம் பாதிக்காத வகையில் நடை முறைப்படுத்த சொல்லித் தரலாம்.தனக்கென்று ஒரு சுற்று வட்டத்தையும் நண்ப‌ர்களையும் ஏற்படுத்திக்கொள்ளவும் சிறிய வேலை வாய்ப்புக்களையும் பற்றி விவாதிக்கலாம்.
           இது அவர்கள் குடும்பத்தில் குழப்பம் விளைவிக்காமல் இருப்பது மிக முக்கியம்.
        குடும்பம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அவர்களும் கண்ணும் கருத்துமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.அதை எடுத்துச்சொல்லி அவர்களுக்குப்புரிய வைக்க வெண்டும்.
   இந்தச் செயல்களை செய்யும்போது சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் ஒரு போதும் கை விடக்கூடாது என்ற முடிவோடு ஈடுபடவேண்டும்.
         

ஓட்ஸோ ஓட்ஸ்!

Uncategorized இதில் பெப்ரவரி 27, 2008 இங்கே kalyanakamala இவரால் இடப்பட்டது.

காலையுணவாக ஓட்ஸ் சாப்பிடுவது என்பது ஒரு கொள்கையாகவே ஆகி வரும் இன்னாட்களில் ஓட்ஸ் தயரிப்பதில் சில முறைகளைத் தெரிவிப்பது நல்லதாயிருக்கும் எனத் தோன்றியதன் விளைவு இந்தப்பதிவு.
ஓட்ஸை அப்படியே தண்ணீரில் கொதிக்க வைத்து பால் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடுவதும் ,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவதும் பழக்கமாக உள்ளது.
ஓட்ஸை மிக்சியில் பொட்டு நன்றாகப்பொடி செய்து விட்டு அதை கொதிக்கவைத்து சாப்பிடுவது கொஞச‌ம் எளிமையாக இருக்கும். மொந்தையாக ஓட்ஸ் கூழ் ஆகாமல் இருக்க உதவும்.
ஓட்ஸை பொடி செய்து மொத்தமாக ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக்கொள்ளலாம்.
ஓட்ஸ் கூழ் தயாரித்த பின் அதில் மோர் விட்டு உப்பு போட்டும் சாப்பிடலாம். அல்லது அந்தக்கூழில் கொஞ்சம் ஒமம் போட்டு உப்பிட்டு சாப்பிட்டால் சிலருக்குப் பிடிக்கும்.
ஓட்ஸ் கூழ் த‌ய‌ரித்த‌பின் அதில் உப்பு செர்த்து கார‌ட், சிறிது கோஸ் பொன்ற‌ மெல்லிய‌ காய்க‌றிக‌ளை வ‌த‌க்கிப்போட்டால் ந‌ல்ல‌ காலையுண‌வு என்ப‌தில் சந்தேக‌மே இல்லை. ஆனால் காய்க‌றிக‌ள் அள‌வு கொஞ்ச‌மாக‌ இருக்க‌ வெண்டும். நிறைய காய்கறிகள்  போட்டால் இலேசாக‌ இல்லாம‌ல் heavy  ஆக‌ ஆகிவிடும்

ஒரு தாயின் மரணம்……….

Uncategorized இதில் பெப்ரவரி 13, 2008 இங்கே kalyanakamala இவரால் இடப்பட்டது.

மரணம் நம் சொந்த பந்தங்களை நம்மிடமிருந்து பிரிக்கிறது என்பதை மட்டும் நாம் நினைக்கிறோம். மரணத்தின் மறுபக்கம் என்ன?
நம் அன்புக்குறியவர்களை நம்மிடமிருந்து பிரிக்கும் மரணத்தின் மறுபக்கம் ஒன்று உள்ளது என்பது நாம் பலரும் அதிகம் யோசிக்காத ஒன்று.
 என் தாயின் மரணம் எனக்கு அதை மிக நன்றாகக்காட்டியது.

அதிகம் பேசாத மென்மையான (புதுமைப்பெண்களிடமிருந்து சுத்தமாக மாறுபட்ட)என் அன்புத்தாயின்  மரணம் போன சனி இரவு நிகழ்ந்தது.
இப்படிக்கூட இறக்க முடியுமா என்ரு தோன்றியது எனக்கு?

அவர் எங்கோ அடுத்த ஊருக்குப்போவது போல இருந்தது,தொலை தூரப்பயணம் போவது போலக்கூட இல்லை.

மரணத்தை ஆவலுடன் அணைத்துக் கொள்ள மனம் ஆசைப்படுமோ? என் அம்மாவின் மனம் ஆசைப்பட்டது.

அவ‌ர் இத‌ய‌ம் விரிவடைந்த‌வ‌ர்(heart enlargement)இர‌த்த‌ அழுத்த‌ம் உள்ள‌வ‌ர். ஆனால் ப‌ல‌கால‌மாக‌ இர‌த்த‌ அழுத்த‌மும் ,heart enlargement ம் இருந்து வந்த‌‌தால் மாத்திரைக‌ள் சாப்பிட்டு வந்தார்.
போன‌ மாத‌ம் முத‌ல் உட‌ல் நிலை ந‌ல‌ம் குறைய‌ ஆர‌ம்பித்து மிக‌ ப‌ல‌கீன‌மாக‌ இருந்தார்.

மிக‌ ப‌ல‌கீன‌மாக‌ ஆகி விட்ட‌பின் ந‌ட‌மாட்ட‌ம் குறைந்த‌‌து. உட‌ல் ந‌ல‌ம் குறைந்ததாலும் மனந‌‌ல‌ம் மிக்க‌வ‌ராக‌ இருந்தார்.தன் கண்ணையும் தானமாகக்கொடுக்கச் சொல்லி விட்டுப்போன எந்தாயின் மன திடத்தை எண்ணிஎண்ணி வியக்கிறேன்!

தன் பிள்ளைகளுக்குத் தொல்லை தராமல் தான் கடவுளிடம் போய்ச்சேர ஓயாமல் பிரார்த்திதார்.

மாலை நாலு மணியளவில் படுக்கையில் கையை ஊன்றி எழுந்தார்.கலைந்திருந்த கூந்தலை சரி செய்யச் சொன்னார்.புடவையைச்சீர் செய்து கொண்டார்.பக்கத்திலிருந்த எல்லா மகன் மகள்களையும் பார்த்தார்.அனைவரையும் பார்த்து ஒவ்வொருவராக அருகிலழைத்தார்.ஒவ்வொருவரின் தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் வழங்கினார்.வாயார வாழ்த்தினார்.மிகவும் களைப்பாக இருப்பதாகக் கூறிவிட்டு எவரும் அழக்கூடாது எனக்கூறினார்.
அதற்குப் பின் சரியாக ஒரு மணி நேரத்தில் சுவாசம் நின்றது.வலி என்றும் பிரிகிறோமே என்ற துன்பமென்றோ கொஞ்சம்கூடச் சொல்லவில்லை.எல்லொரும் தன்னால் துன்பப்படக்கூடாது என்றுமட்டும் நினைத்த என் தாயின் மரணம் என்னை உலுக்குகிறது.எங்கோ பக்கத்திலுள்ள ஊருக்குப்போவது போல எல்லொரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிப்போன என் தாயைப்போல மரண பயமின்றி மரணத்தை ஆவலுடன் தழுவியவர்கள் எவரும் உண்டோ?

அப்பாவா? அம்மாவா?

Uncategorized இதில் ஜனவரி 29, 2008 இங்கே kalyanakamala இவரால் இடப்பட்டது.

ஐந்தாம் தேதி  பதினைந்து வருடங்களுக்கு முன் இறந்து போன என்னுடைய தந்தையின் நினைவு நாள். எனக்கு அன்றைக்கு எல்லா சிலவுகளையும் நானே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ஒரு வேகம் மனதில். சில சடங்குகளைச்செய்வது வழக்கம்.தம்பி,தமயன் மற்றும் அவர்கள் மனைவியர் காரியங்களைச் செய்வார்கள். புரொகிதர்கள் வந்து சிலபல சாங்கியங்களைச் செய்து சாப்பாடு சாப்பிட்டு விட்டுப்போவார்கள்.. அப்பாவும் அவர் மூதாதையர்களும் அன்று வீட்டுக்கு  வருவதாக ஐதீகம். பெண் பிள்ளைகளுக்கு அண்ணன் தம்பிமார்கள் அழைப்பு விடுப்பார்கள் வந்து கலந்து கொள்ளச்சொல்லி. எனக்கு ஒரு எண்ணம் நாமும்தானெ பிறந்தோம் அந்த அப்பாவுக்கு ,ஏன் நாம் அப்படிச் சாப்பாடு போட்டு அந்தச் சடங்கை தனியாகச் செய்யக்கூடாது?
அம்மாவிடம் கேட்டேன்.அம்மாவுக்கு எண்பது வயது. எந்தப் பிள்ளையும் தன் பிள்ளைதான்.அம்மா சொன்னாள் ” நான் இருக்கும் வரை எல்லோரும் சேர்ந்தே செய்து விடுங்கள். தனித் தனியா போக வேண்டாம்”.அம்மா என்றொரு ஜீவன் எப்போதும் இணக்கும் சக்தியாகவே செயல்படுகிறது.”வேண்டுமானால் உன்னால் முடிந்ததை வாங்கிக் கொடேன் அப்பா என்ன வாய் திறந்தா கேட்கப் போகிறார்”.
  சரிதான் நம்மால் முடிந்ததை வாங்கி கொடுப்போம் அம்மா சொல்வதும் சரிதான்!
இரண்டு நாள் முன்பு அம்மாவுக்கு காலில் வலி வந்தது. மருந்துக்கு தன் கைப்பணத்தை எண்ணி எண்ணிக் கொடுத்தார்.மனதிலே ஒரு பொரி!செத்துப்போன அப்பாவுக்கு செய்ய ஆசைப்பட்டேன் இருக்கிற அம்மாவுக்கு நிறையவே செய்யலாமே. அதனால் அப்பாவுக்கு ஒரு ஆத்மா என்று ஒன்று இருந்தால் நிசமாகவே சந்தோஷப்படுமே என்று தோன்றியது.செய்து விட்டேன் இப்பொழுதே மனதும் கையும் நிறைய!
சரிதானே நண்பர்கள?

புரியவில்லை!

Uncategorized இதில் ஜனவரி 26, 2008 இங்கே kalyanakamala இவரால் இடப்பட்டது.

அடிக்கடி எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் முகத்தில் வீக்கத்துடன்  இங்கு

இடித்துக்கொண்டேன்,அங்கு இடித்துக்கொண்டேன் என்று சொல்ல்லியபடி வேலைக்கு

 வருவாள்.எனக்கு சந்தேகமாகயிந்தது.அடிக்கடி இடித்துக்கொள்வாளா?இப்படி

இடித்துக்கொண்டால் இப்படிக் காயமாக வாய்ப்பே இல்லை என்பது போல என் மனம்
 
சிந்தித்தது.

இந்த முறைக் கேட்டே விட்டேன்.

   ” கண‌வன் குடிப்பானா?”என்று.

   “இல்லைய‌ம்மா? சும்மா வாய்ச்ச‌ண்டை ,கையால் த‌ள்ளி விட்டார் வேகமாக

விழுந்து சுவ‌ரில் இடித்துக்கொண்டேன் “என்றாள்.

இப்ப‌டி பெண்க‌ள் ம‌றைக்கிறார்க‌ள் என்ப‌து ஆண்க‌ளுக்கு ஒரு க‌வ‌ச‌மா?

   கேட்டேன் அவ‌ளிடம் ” இப்படி ம‌றைக்கிறாயே? இது நல்லதுக்கா? “

    அடித்து விட்டு ,வீங்கிய‌ பின் டாக்ட‌ரிட‌ம் போ என்கிறார். அடிக்கும் முன்

தெரிவதில்லை.

‘நீ போலிசுக்கு போயிருக்க‌ணும்.அதுதான் ச‌ரி”இது நான்.

 ”போலிசுக்குப் போய் பெரிது ப‌ண்ண முடியாத‌ம்மா. பிள்ளைக‌ள் இருக்கிறார்க‌ள்.

இதோ நாளைக்கு ச‌ரியாகிடும் காய‌ம். பிள்ளைக‌ள் அப்ப‌ன் இல்லாம‌ல் வாழ்வ‌து அப்ப‌டி

ச‌ரியாகிற‌ காரிய‌ம் இல்லைய‌ம்மா‌.பிள்ளைக‌ளும் நாளைக்கு ஒத்துக்

கொள்ள‌மாட்டாங்க‌.இர்ண்டு நாள் அம்மா வீட்டுக்குப்போனால் கூட‌ அப்பா‌வை

நினைத்துக்கொள்வார்க‌ள்.”

அவ‌ள் விஷ‌ய‌ம் தெரிந்த‌‌வ‌ளா இல்லை நான் தெரிந்த‌‌வ‌ளா?புரிய‌வில்லை

ரஜனி ஒரு சூரிய நட்சத்திரம்!

Uncategorized இதில் ஜனவரி 14, 2008 இங்கே kalyanakamala இவரால் இடப்பட்டது.

நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கலைஞர் டீவீ யில் சிவாஜி விழா (நூற்று எழுபத்தைந்து நாட்கள்)கொண்டாட்டங்களைப் பார்த்தேன்.எல்லாதுறையைச் சேர்ந்தவர்களுக்கும் சிவாஜியில் பணிபுரிந்ததற்காக பரிசுகள் வழங்கப்பட்டன. வைரமுத்து ,பா.விஜய்,சுஜாதா,விவேக்,ஸ்ரேயா,படப்பிடிப்பாளர்,படத்தொகுப்பளர் ,சாலமன் பாப்பையா,ராஜா,ஏ.வீ.எம்சரவணன் எல்லொரும் பேசின பின் முக்கிய பிரமுகர்களான ரஜனியும் கலைஞரும் பேசினார்கள்.
 விவேக் ,சரவணன் மற்றும் ஷங்கர் அருகிலிருந்து பழகிய காரணத்தால் ரஜனியின் குணங்கள் பழக்கவழக்கங்கள் பற்றிப் பேசியபோது எனக்கு வியப்பாக இருந்தது.மிகவும் எளிமையாக ரஜனி இருப்பதாகவும், உணவுக்கட்டுப்பாடு மிகக்கடினமாகப் பின் பற்றுவதாகவும்,ஒரு வார்த்தை டைரக்டரின் பேச்சுக்கு பதில் கூறாமல் நடிப்பாரென்றும் தன்னடக்கம் மிக்கவரென்றும் ,கடுமையான உழைப்பாளி என்றும்,அதிக செலவு தயாரிப்பாளர்களுக்கு வைக்காமல் நடப்பார் ,மிக நல்ல மனிதரென்றும் பேர் பேராகச்சொன்னார்கள். மிகவும் ஆசரியமாக இருந்தது. ஏதோ ஒருவர் அல்லது இருவர் சொன்னால் பணக்காரனைச் சுற்றிப்பத்து பேர் பயித்தியக்காரனைச்சுற்றி பத்து பேர் என்று விட்டு விடலாம். ஆனால் பேர் பேராக திரும்ப திரும்ப  அவரைப்பற்றி மிக நல்ல முறையில் எல்லொரும் பேசினார்கள். கடைசியில் கலைஞரும் அவரைப்பற்றி மிக நல்ல அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி விட்டு அவர் அவரது விசிறிகளால் ஒரு மகானாகவே போற்றப் படுபவர் என்றுமவர் ஒரு  சூரிய நட்சத்திரம் என்றும் எல்லாவற்றுக்கும் மகுடம் போன்ற புகழ் வார்த்தைகளை வீசினார். அத்தனைக்கும் ரஜனி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு யாருடைய மனமும் கோணாமல் கடைசியில் “வியுகம் அமைத்து இந்த வெற்றியை ஏற்படுத்தியது ஷங்கர்தான் “என்று பணிவுடன் கூறியது மறக்க முடியாத வார்த்தையாக இருந்தது.மொத்தத்தில் நேற்றைய நிகழ்ச்சி ரஜனி எவ்வளவு சிறந்த மனிதர் என்பதை எல்லோருக்கும் உணர ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.
    அதற்கும் மேலே இந்த இனிய பொங்கல் நன்னாள் தொடங்கி நாமும்தான் முயற்சி செய்யலாமெ இப்படி ஒரு சிறந்த மனிதர் என்று எல்லோரிடமும் பெயர் வாங்க என்று எனக்கும் தோன்றியது என்னவோ உண்மைதான்!

புதுமைப்பெண் கொடி!

Uncategorized இதில் ஜனவரி 13, 2008 இங்கே kalyanakamala இவரால் இடப்பட்டது.

நாலு மாதம் முன்பு மதுரை போயிருந்தேன். தம்பி வீட்டில் இரண்டு  நாள் தங்கி விட்டு வந்தேன். அவன் வீடு மதுரையில் ஒரு தனி வீடு, வீட்டைச்சுற்றி தோட்டம். தம்பியும் தம்பி மனைவியும் அழகிய தோட்டத்தை உருவாக்கியிருந்தார்கள்.எல்லாவிதமான மலர்களும் கொத்து கொத்தாகப் பூத்திருந்தன. பார்க்கவே ஆசையாக இருந்தது.
அதில் சீக்க்கிரமே முளைக்கக்கூடிய சங்குச்செடியின் விதைகளைப் பறித்துப்பையில் போட்டுக்கொண்டு சென்னை வந்தேன்.சென்னைக்கு வந்ததும் சங்குச்செடி விதைகளை ஒரு தொட்டியில் மண் போட்டு நீர் ஊற்றி ஊன்றி வைத்தேன். ஒரு மாதகாலம் தண்ணிர் ஊற்றியபின் மெதுவாகச்செடி முளைத்து வர ஆரம்பித்தது.மெதுவாக இரண்டு இலகள் நான்கு இலைகள் என்று வளர ஆரம்பித்தது. ஏழெட்டு இலைகளும் விட்டு கொஞ்சம் கொடியும் வளர்ந்தபின் கொடி நுனி அறுந்து விடப்போகிறதே என்று ஒரு கொம்பைப்பக்கத்தி வைத்தேன். கொடியும் மேலே வளர்ந்ததே தவிர கொம்பைச்சுற்றிக் கொள்ளவே இல்லை. எனக்கோ ஒரே ஆச்சரியம்.
நான் பார்த்தவரை  கொடி நீளமாக வளரத்தொடங்கியவுடனேயே  பக்கத்திலிருக்கும் எந்த ஒரு பற்றுதலையும் கொடிகள் சுற்றிக்கொள்வது இயல்பாக நடக்கும் ஒன்றுதானே?
இந்தக்கொடி என்னவோ இரண்டு மூன்று நான்கு அடிகள் என்று வளர்கிறது ஆனால் கொம்பை சுற்றிக்கொள்ளவேஇல்லை. பக்கத்திலிருக்கும் கிரில் (grilல்)மீதும் படர வில்லை.இப்போது இன்னும் சில கிளைகள் அதே செடியிலிருந்து வளர்கின்றன. அவைகள் ஒன்றை ஒன்று சுற்றிக்கொள்கின்றன.
கொம்பை நாடாத கொடியாக இந்த சங்குச் செடியைப் பார்த்தவுடன் அந்தச்செடிக்கு புதுமைப்பெண் என்று பெயரிடத் தோன்றியது எனக்கு. சரிதானே?

ந‌‌ம் ஆரோக்கிய‌ம் ந‌ம் கையில்!

பொது இதில் ஜனவரி 3, 2008 இங்கே kalyanakamala இவரால் இடப்பட்டது.

     முன்பெல்லாம் நிறைய சாப்பாடு சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார்கள் பெரியவர்கள்.
சாப்பிடுவதற்கு முன் எதையும் தின்னாதே, தண்ணீர் குடிக்காதே,பசியை அடைத்து விடும் என்று சொல்லுவார்கள். இப்போ எல்லாம் தலைகீழ்.எங்கும் இப்பொழுது தாரக மந்திரமாக இருப்பது அரிசியைக் குறை என்பதுதான். பால் குடி என்பார்கள் .மாடு மாதிரி கறிகாய்களைத் தின்பது கிடையாது . நிறைய சாப்பிடு, நிறைய வேலை செய் என்பதுதான் மந்திரமாக ஒலிக்கும்.
இப்போவெல்லாம் சின்ன வயதுப் பிள்ளைகள்கூட அரிசியைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்பெல்லாம் காலையில் அரிசியால் செய்த பலகாரம் மதியம் சாப்பாட்டில் அரிசி இரவிலும் அரிசி.
அந்நாட்களில் வாழ்க்கை முறை வேறுமாதிரி இப்பொழுது வாழ்க்கை முறை எளிமையாகி விட்டது. மேலும் வெளியே வாங்கிச் சாப்பிடும் பொருட்கள் குறைவு.அனேகமாக பல வீடுகளில் அந்தப் பழக்கம் இல்லாமலேயே இருந்தது என்பதுதான் உண்மை.
இப்பொழுது காலை உணவென்றால் (corn flakes),ரொட்டி,காய்கறிகள்.பழங்கள் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.பழச்சாறு குடிக்க வற்புறுத்துகிறார்கள்.
பல பேர் மாடு மாதிரி காய்கறிகளையே தின்னுகிறார்கள்.
மதியம் திரும்ப ஸ்பூனால் அளவு செய்து சாப்பாடு சாபிடுகிறார்கள்.

மாலையில் தேனீருடன் பிஸ்கட் சாப்பிடச் சொல்லுகிறார்கள்.  முன்று வேளை சாப்பாடு என்பதும்  இடையிடையே மோர் அல்லது ஏதேனும் நிலக்கடலை அல்லது முறுக்கு போன்ற பலகாரங்களோ சாப்பிடுவது என்பது பழக்கமாயிருந்தது போக ,இப்போ
காலை உணவு (அவர்கள் கொடுக்கும் பட்டியலைப் பார்த்தாலே நடுத்தர வர்கத்து மனிதர்களுக்குப் பயமாயிருக்கும்)முற்பகல் உணவு, மதிய உணவு,மாலை உணவு இரவு உணவு என்று நாலு முறையாகப் பிரித்து உண்ணச்சொல்கிறார்கள்.
ஏரொபிக் செய்யச்சொல்கிறார்கள்.பெரியவர்களானால் நடக்கச்சொல்கிறார்கள்.
வாழ்க்கை முறை மாறிப்போனதுதான் இதற்கெல்லாம் காரணம்.
      நடப்பது என்பதும் ஏரோபிக் என்பதும் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்ததது மாறிப்போனதுதான் இதற்கெல்லாம் காரணம். ஆனால் இனிமேல் ஆட்டுக்கல்லையும் அமியையும் கொண்டு வர முடியும் என்று தொன்ற வில்லை. ஆனால் சைக்கிள் என்பது ஆரொக்கியத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்னவோ உண்மைதான். அதை ஏன் நாம் விட்டோம்? சீனாவிலும் ,ஆஸ்திரேலியாவிலும் சைக்கிளை மிகவும் உபயோகப்படுத்துகிறார்கள். கிழக்காசிய நாடுகளில் சைக்கிள் நடை முறையில் இருந்து வருகின்றது. அதை நாம் கை விட்டது பெரிய தவறாகப்போய் விட்டது. திரும்ப அதைப் பழக்க வேண்டும்.
     ஒரு கிலோமீட்டர் அல்லது இரண்டு கிலொமீட்டருக்கு உட்பட்ட இடங்களுக்கு நடந்து போவதை ஒரு கட்டயமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.பணம் செலவு செய்து பெட்ரோல் செலவழித்து மோட்டார் சைக்கிள் போன்ற வாகனக்களில் போவதைத் தவிர்க்க வேண்டும்.குழந்தைகளையும் நேரத்தில் எழுந்து சீக்கிர‌மாக குளித்து ,உணவு சாப்பிட்டு நடந்து பள்ளிகளுக்கு செலவதற்குப் பழக்கப்படுத்த வேண்டும். கூடிய வரைத் துணிகளைத் துவைக்க மெஷின்களைப் பயன் படுத்தாமல் இருந்தாலே ,கையால் துவைக்கும்போது நல்ல உடற்பயிற்சி கிடைக்கும்.வீடு பெருக்குவது, துடைப்பது ஒரு நல்ல exercise.தினமும் செய்வது கடினமாயிருந்தாலும் இரன்டு நாட்களுக்கு ஒரு முறையாவது நம் துணிகளை நாமே துவைக்கலாம்.காலை மற்றும் மாலையில் காலார நடப்பது மிகவும் முக்கியமான ஒன்று. ந‌டந்து போய் ஏதாவது ஒரு வேலையைச்செய்து விட்டு வரலாம்.இவ்வாறு பல வழிகளிலும் நம்மை நாமே உணர்ந்து சில பழக்கங்களை மேற்கொண்டால் தனியாக ஆரொக்கியம் குறித்துக்கவலைப்பட வேண்டாம்.