தந்தை மகள் உறவு நிபந்தனைகுட்பட்டதா?
Uncategorized இதில் ஜூன் 29, 2008 இங்கே kalyanakamala இவரால் இடப்பட்டது.நேற்றைக்கு ஒரு நண்பரின் மகனுக்காக கோர்ட்டுக்குச் செல்லவெண்டிய நிர்பந்தம். கோர்ட்டுன்னா அந்த ஆணின் திருமணம் மன வேறுபாட்டால் முறிந்து விட்டது. பெண் குழந்தை ஒன்று உண்டு. வயது 7 முடிந்து 8வது வயது நடக்கிறது.
அந்த ஆண் வெளினாட்டில் பணி புரிபவர். அதனால் அவர் குழந்தையைப் பார்க்க நீதிபதியின் தாற்காலிக ஆணைப்படி அனுமதி பெற்றாலும் பல காரணங்கள் சொல்லி அதை அந்தப் பெண்மணியின் பக்கத்தினர் தள்ளுபடி செய்கிறார்கள்.
இவர் ஒவ்வொரு முறை வெளினாட்டிலிருந்து வந்து 6 அல்லது 7 மாதங்கள் இந்தியாவில் தங்கி மனுப்போட்டு கேஸ் கோர்ட்டில் வந்து வாதிக்கப்பட்டு பல ஹியரிங்குகளுக்குப் பின் சில நாட்கள் அவருடைய மகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டு பின் முழு அனுமதி பெறாமலேயே வெளினாடு கிளம்பும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
இப்படியே 7 வருடங்கள் போன பின் இப்போது அவருடைய தாய் தந்தையரும் அவருடன் கூடப்பொகும் அனுமதி பெற்றனர்.
ஒரு சப்போர்ட்டுக்காக நானும் போனேன்.
அந்தக்குழந்தை தகப்பனைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. தாயின் சவால் “உன்னால் முடிந்தால் அவளைத் திரும்பிப்பார்க்க வைத்து பேசு பார்க்கலாம்”என்பது
அந்த ஆணை வளர்த்த விதம் சரியில்லை என்றும் புகார்.
குழந்தையைப் போட்டோ எடுத்தால் கையிலிருந்த கேமராவைப் பிடுங்கித் தூர எறிந்து விடுவதாக மிரட்டல். அதையும் மீறி போட்டொ எடுத்தால் குழந்தையை மறைத்துக்கொள்ளுவது கைகளால் பேப்பரால் மற்ற பிற பொருட்கள்களால்.அதையும் மீறி செய்தால் போலீசைக் கூப்பிடுவதாக மிரட்டல்.
வயதில் பெரியவர்களான தாத்தா பாட்டிக்கு துளிகூட மதிப்பு கொடுக்கப்படவில்லை.
அந்த ஆண் சரியாக வளர்க்கப்படவில்லை ,சரி!இந்தப்பெண் சரியாகச் செயல்படுகிறாளா? தன் குழந்தையை சரியான பாதையில்தான் கொண்டு போகிறார்களா?
தகப்பனைப் பார்த்து” நீ பெண்ணை மதிக்கக் கற்றுக்கொள்.உன் பெண் உன்னை மதிப்பாள்” என்று அறிவுரை வேறு.
தகப்பனைக் கோர்ட்டில் நிறுத்தி மதிக்காமல் நடத்தி தன் மகளுக்கு அந்த்தாய் சொல்லிக் கொடுத்து வளர்க்கும் முறைதான் என்ன? ஆணை மதிக்கக்டாது என்பதுதானே?
இதுதான் பெண் உரிமையா?