அப்பா காசு இனிக்கும்
Posted by kalyanakamala மேல் நவம்பர் 15, 2007
கைநிறைய கண்ணாடி வளையலுடன் தோழிகளோடு
கும்மாளமிட்டபடி வந்தபோது,கண்ணாடி வளையலில் காசை
ஏனடி கொட்டினாய் என்று குமுறிய அம்மாவைச்
சும்மாக்கிட இதுதான் ஃபாஷன் என்று வாயடைத மகளும்,
அப்பா திட்டியபடிக் கொடுத்த காசை காட்ச் பிடித்துப்போய்
நாலு சட்டை நாலாயிரம் கொடுத்து வாங்கி மகிழ்ந்த மகனும்
கைநிறைய சம்பாதித்து நாலு சட்டைஎடுக்க
நினைத்தபோது எடுக்க நேரமில்லாமல் போனது
காலம் செய்த கோலமோ?
அப்பா கொடுத்த காசு வாழவிட்டது மனதில் இனிக்கிறதுஎனக்கு,
ஆனால் என் காசு வாழ வைக்கிறது கனக்கிறது அம்மாவுக்கு.
கலை அரசன் மார்த்தாண்டம் said
கவிதை அருமை…
நிறைய அம்மாக்களுக்கு இதே மனநிலைதான்…
நிறைய கவிதையும் எழுதுங்கள்…
உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் கைகொடுக்கும்…
நட்புடன்
மா.கலை அரசன்.
அனாமதேய said
Google
Google is the best search engine Google